மனதை பலப்படுத்தும் வரிகள் -
M.S. உதயமூர்த்தி
💥
" கடமையைச் செய். முடிவைப் பற்றி, பயனைப் பற்றி கவலைப்படாதே!'. இந்த வாக்கியத்தை விட நல்ல வாக்கியத்தை கஷ்டப்படுபவர்களுக்கு நாம் சொல்ல முடியாது.
சூழ்நிலையைத் தெளிவாக ஆராய்வதன் மூலம் இந்த வேண்டாத மன உளைச்சலைப் போக்கிக் கொள்ளலாம். பல தற்கொலைகள், அறியாமையால், தன்னம்பிக்கையும், அது தரும் துணிவும் இல்லாமையால் நடக்கின்றன. தன்னபிக்கை பெற நல்ல மருந்து நம் பிரச்னை சம்பந்தமான காரியத்தில் இறங்குவது தான்.
நாம் முயற்சியில் ஈடுபட்டால் கவலை மறந்து விடும்.
ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்: கடலைப் போன்றது தான் வாழ்க்கை. மேடு, பள்ளம் நிறைந்தது. புயல் நெடுநேரம் வீசப் போவதில்லை. இரண்டு மரங்களைக் கீழே தள்ளியவுடன் புயல் தானே நின்று விடும் என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கினால், நிலைமை மாறும். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும், துணிவும் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.
வாழ்க்கையின் முழுமுதற் கொள்கை தான் என்ன? செயல், தொண்டு, பணி, கருமம், உழைப்பு என்று பிறந்த உயிர் வாழத் துடிக்கிறது. அது ஜீவத் துடிப்பு. அந்த ஜீவத் துடிப்பு நம் எல்லாருள்ளும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்; உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு. மனிதன் தேவனாகும் முயற்சி தான் வாழ்க்கை! நாம் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காகச் சில திறமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறோம். நமது திறமைகளைத் தெரிந்து கொள்வோம். இந்த உலகம் முன்புபோல் இல்லை. வெகுவேகமாக மாறி வருகிறது. அதை உணர்ந்து அதற்கு ஈடு கொடுக்க நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் அது நம்மை விட்டு விட்டு, நம்மைப் பழங்குடி மக்களாக்கி விட்டுப் போய் விடும்.
வாழ்வு ஒரு சீட்டு விளையாட்டுப் போல. நமது சீட்டுக்களை நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை; கட்டுப்படுத்த முடிவதில்லை. நம் கையில் சில சீட்டுக்கள் வந்திருக்கின்றன. இவை தானே வந்திருக்கின்றன என்று நொந்து கொள்ளாமல், அலுத்துக் கொள்ளாமல் இருப்பதை வைத்துச் சிறப்பாக விளையாடும் திறமை தான் வாழ்க்கை.
அந்த நிலையில் நாம் சிறிது நேரம் அல்லது ஒரு 10 நிமிடம் எதுவும் சிந்திக்காமல் அமர்ந்திருந்தோமானால் கொஞ்சம், கொஞ்சமாய் திடீரென ஒரு எண்ணம் எழும்பும். அதை தான் உள்ளொலி, உள் உணர்வு எனக் கூறுகின்றனர். அதன்பின், மனதில் தெளிவு ஏற்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துவங்குவீர்.
நன்றி
🙏