Flipkart Offer

Friday, July 10, 2020

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம்
(நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என மாற்றிக் கொள்ளளாம். )
நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன்
நான் அதித உயிர் சக்தி கொண்டு ஆரோக்கியமாக ஆனந்தமாக உள்ளேன்
நான் நல்ல ஆரோக்கியமாக இருக்க என் நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு பெரும் உதவி செய்து கொண்டிருப்பதற்கு நன்றி நன்றி நன்றி
என் நோய் எதிர்ப்பு சக்தி என்னை பாதுகாத்துக் கொண்டு இருப்பதற்கு நன்றி.
நோய் எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு நாளும் அதிகப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.
என் நோயெதிர்ப்பு சக்தியினால் நல்ல உடல் நிலையுடன், ஆரோக்கியமாக உள்ளேன்.
எந்தவொரு நோய்த்தொற்று கிருமிகளிடமிருந்து என்னை பாதுகாக்கும் என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி நன்றி நன்றி...
"கவனம் போகும் இடத்தில் சக்தி பாயும்"
நம் உடல்நிலை ஆரோக்கியத்தைப் பற்றி நல்ல ஆரோக்கிய சிந்தனையை கொண்டு இருந்தால் ஆரோக்கியத்துடன் நாம் இருக்க முடியும்...
நம் கவனம் முழுவதும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமாக நாம் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதொரு ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தினால், நல்ல ஆரோக்கிய உடல் நிலையைப் பெற முடியும்.
" நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நிலையுடன் ஆரோக்கியத்துடன் இருந்து கொண்டிருப்பதற்கு நன்றி நன்றி நன்றி"
இதனை மனதார ஆழ்மனதில் உரக்கச் சொல்லுங்கள். இதன் மாற்றத்தை காணுங்கள்
நன்றி
#ஈர்ப்பு_விதி
கோ.கோபிநாத்


Saturday, June 8, 2019

செல்வத்தினை கவர வேண்டுமா?

செல்வத்தினை கவர வேண்டுமா?

செல்வ செழிப்பின் மீது கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கை நிறைய பணம் இருப்பது போல் கற்பனை செய்யுங்கள்.
உங்கள் புது வீட்டினை கற்பனை செய்து காணுங்கள்.
உங்கள் வங்கி கணக்கில் அதிக பணத்தினை காணுங்கள்.
அந்த கற்பனை நிஜமாக உருவாகும்.
நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் கோ . கோபிநாத்.


Sunday, March 31, 2019

பணத்தைப் பெற பணத்தைக் கொடுங்கள்!

பணத்தைப் பெற
பணத்தைக் கொடுங்கள்!
உங்கள் வாழ்வில் மேலும் அதிகமான பணத்தை கொண்டுவர மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிமுறை பணத்தை பிறர்க்குக் கொடுத்து உதவுவது. ஏனெனில் நீங்கள் கொடுக்கும் பொழுது என்னிடம் ஏராளமாக பணம் இருக்கிறது அதனால் நான் மற்றவர்களுக்கு உதவிகிறேன் என்று எண்ணுகிறீர்கள் அந்த எண்ணம் உங்களிடம் பணத்தை கவர்ந்திழுக்கிறது. இவ்வுலகில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்கள் மிகப்பெரிய நன்கொடையாளர்களாகவும் இருப்பதை அறியும் போது நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அவர்கள் மிகப் பெரிய தொகையை தானமாக அளிக்கின்றனர். அவர்கள் அப்படிக் கொடுக்கும்போது ஈர்ப்பு விதியால் பிரபஞ்சம் அவர்கள் கொடுத்ததைவிட பன்மடங்கு அதிகமான பணத்தை வெள்ளமென அவர்களிடம் கொண்டு வந்து சேர்கிறது.

"என்னிடம் கொடுப்பதற்கு போதுமான பணம் இல்லை" என்று சிந்திப்பவரா நீங்கள்?  அடடா! உங்களிடம் ஏன் போதுமான பணம் இருப்பதில்லை என்று இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா அப்படிப்பட்ட எண்ணம் வந்தால் கொடுக்க தூங்குங்கள் கொடுப்பது குறித்த உங்கள் நம்பிக்கையை நீங்கள் உணரும் பொழுது ஈர்ப்பு விதி இன்னும் அதிகமாக மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும்.

நன்றியுடன்
கோ.கோபிநாத்.

Tuesday, March 19, 2019

குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்


 குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்





திர்ஷ்டத்தின் விளைவுதான் வெற்றி என்று பலர் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் ஓரளவு உண்மை மறைந்திருக்கக் கூடும். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை சார்ந்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றத்திற்கு ஆளாகக்கூடும். நீங்கள் உங்கள் சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்க முடியும். திடமான உறுதியான குறிக்கோள் தான் இதற்கு முதல் படி.


நீங்கள் எதிர்கொள்ளும் நண்பர்கள் அணுகி உங்கள் வாழ்வில் எதை பெற அல்லது உங்கள் குறிக்கோளை பெற நீங்கள் கொண்டுள்ள திட்டம் என்ன என்றால் நூற்றுக்கு 98 பேருக்கு இதற்கான பதில் தெரிந்திருக்காது. தெளிவாக வெளிப்படுத்தப்படாத இந்த எண்ணங்களை கொண்டவரிடம் குறிக்கோளை அடைய சரியான திட்டம் இருக்காது. செல்வ வளங்களை பெற அதிர்ஷ்டம் மட்டும் போதாது. உங்கள் குறிக்கோளை நோக்கி தொடர் முயற்சி சரியாக திட்டமிடல் இவையே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கும்.

Tuesday, March 12, 2019

உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்

உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்



        அளவற்ற செல்வங்கள் உங்கள் அருகில் மிக மிக அருகில் உள்ளது. அவற்றை நீங்கள் உங்கள் ஆழ்மனதின் உதவியுடன் அடைய முடியும். நீங்கள் மகிழ்ச்சியுடனும், அன்புடன், புகழுடனும், ஆனந்தமாக, வாழ வழிவகை செய்யும்.


ஒருமுறை நீங்கள் உங்கள் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் இந்த அற்புத சக்தியை உணர்ந்து கொண்டால் உங்களது வாழ்வில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும், நீங்கள் கவர்ந்திழுக்க முடியும்.

                 நீங்கள்   ஒரு செல்வந்தராகவோ பணக்காரனாகவோ விரும்பினால் அவ்விருப்பத்தினை உங்கள்  ஆழ்மனதிடம் உணர்வுபூர்வமாக, அன்பாக, தெரியப்படுத்துங்கள். அது உங்களுக்கு ஏற்றார்போல் சரியான விடை அளிக்கும்.

            உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான ஏதோ ஒன்றை வாங்குவதற்கு உங்களிடம் பணம் இல்லாத போதும் கூட, அந்தப் பொருளை நீங்கள் வாங்கி விட்டது போல் உங்கள்  மனக்காட்சியில்  அப் பொருளை உருவாக்கி அது உங்கள் கையில் தான் உள்ளது போல் மனத்திரையில் கண்டு அதை உண்மை என்று உணருங்கள்.  நீங்கள் அறியாத ஏதோ ஒரு வழியில் அது உங்களை வந்து சேரும்.

நன்றி
கோ.கோபிநாத்.


Main Page

Monday, December 31, 2018

இலக்குகளுடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதிய இலக்குகளுடன் இந்த புதிய வருடத்தை தொடங்குவோம்.

 100 இலக்குகளை அடையுங்கள் 

இந்த வருடத்தில் நீங்கள் சாதிக்க விரும்பும் நூறு இலக்குகளை சாதனைகளை ஒரு பட்டியலிடுங்கள்.

நீங்கள் வாழ்க்கையில் அடைய விரும்பும் சாதனைகள், செய்ய விரும்பும் நற்செயல்கள்,  இலக்குகள் என அனைத்தையும் எழுதி வையுங்கள். 

உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள அனைத்தும் சரியான நேரத்தில் சரியான முறையில் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு கிடைக்கும் என்று கற்பனை செய்யுங்கள். 

இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பரிசு அளிப்பதாக கற்பனை செய்யுங்கள். 

புதிய விஷயங்கள் நற்சிந்தனைகள் தோன்றினால் அதையும் உங்கள் விருப்பப் பட்டியலில் எழுதிக் கொள்ளுங்கள். 

உங்கள் விருப்ப பட்டியலை படித்து அவற்றை அடைந்தது போல் கற்பனை செய்யுங்கள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பயிற்சி இது. 

தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் வெற்றியை ஆனந்தத்துடன் கொண்டாடுங்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வணக்கம்

நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் 
கோ. கோபிநாத்


Sunday, April 8, 2018

மனஅழுத்தம் குறைக்க சில வழி முறைகள்


மனஅழுத்தம் குறைக்க சில வழி முறைகள்

மனஅழுத்தம் குறைக்க சில
வழி முறைகள்.

இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாதுஎன்று சொல்லப்பழகுங்கள்.

காலை நேர நடைபயிற்சி செய்யுங்கள் மனதிற்க்கு புத்துணர்வு தரும்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். இனிமையான பாடல்களை கேட்பது, நகைசுவையுணர்வு, அமைதி, உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடுங்கள்.

பிறருக்காக எதையேனும உதவி  செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.


அனைத்து மனஅழுத்தத்திற்க்கு மாபெரும் மந்திர சொல் - 


அனைத்தும் கடந்து போகும்.
(அன்று)

எவ்வளவே பார்த்துட்டேம் இத பார்க்க மாட்டேமா!!! 
(இன்று)

நடிகர் பிரேம்ஜி வசனம்.

நீங்கள் மன அழுத்தம் அடையும் போது இதனை நினைத்து பாருங்கள் உங்கள் வாழ்வில் மாயாஜாலம் நிகழும்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்...!

அன்புடனும் மகிழ்ச்சியுடனும்

கோபிநாத்.

Thanks To share Your Friends

Main Page

Wednesday, April 4, 2018

கற்பனை தான் உங்கள் தொழிலை உயர்த்தும் ...



கற்பனை தான் எல்லாம்
    அது வாழ்க்கையில்
வரப் போகும் வசந்தங்களின்
    முன்னோட்டம்
     -   ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கற்பனை தான் படைப்பின் துவக்கம்.

     நீங்கள் விரும்பும் ஒன்றை மிக ஆழமாகவும், துல்லியமாகவும் கற்பனை செய்யுங்கள். நீங்கள் விரும்பியது உங்களது வாழ்வில் நடந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள்.

     ஒருவர் ஒரு சூப்பர் மார்கட் ( SUPER MARKET) நடத்த விரும்புகிறார். அந்த விருப்பத்தை அவருக்கு நிறைவேற்றியது அவரது கற்பனைதான்.

     ஒரு குறிப்பட்ட நாட்களுக்குள் அவரது விருப்பம் நிறைவேறிவிட்டதாக கற்பனை செய்தார்.

     எனது சூப்பர் மார்கெட்டிற்க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது சூப்பர் மார்கெட்டில் உள்ள பொருட்கள் மிக தரமானதாகவும், வாடிக்கையாளர்களின் மனதிற்க்கு இதமானதாகவும் இருப்பதால் நான் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கிறேன். எனது கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் எனது வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது.

     “ நேற்றைவிட இன்று எனது தொழில் மிக சிறப்பாகவும் ஆனந்தமாகவும் லாபகரமாகவும் நடைபெற்றதற்க்கு ஆத்மார்தமான நன்றி நன்றி நன்றி…”

     கற்பனை செய்யுங்கள் உங்கள் தொழிலை உயர்த்துங்கள் ...

அன்புடனும் நன்றியுணர்வுடனும்

கோ. கோபிநாத்

உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ...

Main Page

Friday, March 16, 2018

மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள ….



மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற இதனை தினமும் காலை இரவு தூங்கும்முன் மனதார படியுங்கள் – வெற்றி உங்களுதே!!!

எனக்கு படிப்பது மிகவும் பிடிக்கும்.

நான் தேர்வுகளை நேர்மையாக மனநிறைவான எண்ணங்களுடன் எழுதுகிறேன்.

நான் இதுவரை வெற்றிபெற்ற அனைத்து தேர்வுகளுக்கும் நன்றி.

என்னால் எதையும் படிக்கமுடியும் எதையும் அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நாளும் என்னுள் படிப்பதற்கான் ஆர்வம் வளர்ந்து கொண்டே வருகிறது.

என் நேர்மறையான (Positive) எண்ணங்களுக்கு நன்றி.

நான் படிப்பதற்க்கு ஏற்ற நல்ல சூழ்நிலைகள் அமைந்ததற்க்கு நன்றி.

நான் படித்ததை எனக்கு ஞாபகபடுத்தும் ஞாபகசக்திக்கு மிக்க நன்றி.

நான் ஆழ்ந்த கவனத்தோடு படிக்கவும், என் அறிவை வளர்க்கவும் பெரிதும் உதவிய கல்விக்கு நன்றி.

எனக்கு கல்வியை அளித்த ஆசிரியருக்கு நன்றி.

நான் பாடங்களை முழுமையாக புரிந்து படிக்கிறேன்.

என் கவனம் முழுவதும் தேர்வில் நான் பெறும் வெற்றியை நோக்கியே உள்ளது.

நான் இந்த பொதுத்தேர்வில் பெறபோகும் நல்ல மதிப்பெண்காளிக்கு நன்றி.

இந்த பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்க்கு நன்றி.

நான் கவலைகள், அச்சமின்றி தேர்வை எதிர்கொண்டதால் அதிக மதிப்பெண்களை பெற்றேன்.

தேர்வின் முடிவுகள் என் வாழ்க்கையின் நல்ல மாற்றத்தையும் புதிய துவக்கத்தையும் அளிப்பதற்க்கு நன்றி.

தேர்வின் வெற்றியை நான் இன்றே உண்ர்கிறேன்.

தேர்வின் வெற்றி என் வாழ்வின் அடுத்த நிலைக்கு என்னை அழைத்து செல்கிறது.

என் இலக்குகள் நோக்கியே என் பயணம் முழுவதும் உள்ளாது.

இன்று நடைபெறும் தேர்வில் நான் பெறபோகும் அதிக 
மதிப்பெண்களுக்கு நன்றி.

நான் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க காரணமாக உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

நான் எழுதிய அனைத்து தேர்வுகளில் அதிக மதிப்பெண்களும் தேர்வில் மாபெரும் வெற்றி பெற்றதற்க்கு நன்றி.

நான் புத்திசாலி என்பதை நிரூபித்தேன்.

என்னுடைய கல்வியை நான் மதிக்கிறேன் ஏனெனில் அது என்னை 
உலகிற்க்கு அடையாளம் காட்டியது.

நான் இத்தேர்வில் மிக சிறப்பான முறையில் எதிர்கொள்ள எனக்கு துணைபுரிந்த

என் பெற்றோர்களுக்கு நன்றி நன்றி நன்றி

என் ஆசிரியர்களுக்கு நன்றி நன்றி நன்றி

என் நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி


அன்புடனும் மகிழ்ச்சியுடனும்

கோபிநாத்


share to All...

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...