Flipkart Offer

Tuesday, November 7, 2017

நீங்கள் குடிக்கும் தண்ணீரும் உங்கள் உணர்வுகளுக்கு, வார்த்தைகளுக்கு ரியாக்ட் செய்யும்

நீங்கள் குடிக்கும் தண்ணீரும் உங்கள் உணர்வுகளுக்கு, வார்த்தைகளுக்கு ரியாக்ட் செய்யும்
.
ஜப்பான் நாட்டில் பல நாட்களாக புஜிவாரா அணைக்கட்டில் இருந்த நீர் மாசடைந்து விஷத்தன்மை அடைந்து இருந்தது..தண்ணீரின் நிறம் மாறி மக்கள் பயன்படுத்த நிலையில் இருந்தது.
.
ஜப்பானை சேர்ந்த தண்ணீர் ஆய்வு செய்யும் விங்ஞானி மாசரு எமட்டோ ஜப்பான் புஜிவாரா அணைக்கட்டில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்து வந்து உறையவைத்து சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தார்
.
தண்ணீரில் மூலகூறுகள் வடிவங்கள் இல்லாமல் கோரமாக காட்சியளித்தது
.
பின்னர் விங்ஞானி மாசரு எமட்டோ அவர்கள் அந்த நாட்டில் உள்ள புத்த பிட்சுகளை அழைத்து வந்து பிராத்தனை நடத்தினார்.
.
ஒரு மணி நேர புத்த பிட்சுகளின் பிராத்தனைகளுக்கு பின்னர் மாசடைந்த தண்ணீரின் நிறம் மாறி இருந்தது. நீரும் தூய்மையாக மாறி இருந்தது.
.
மறுபடியும் அணைக்கட்டில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்து வந்து உறையவைத்து சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தார். தண்ணீரில் மூலகூறுகள் அழகிய கிறிஸ்டல் வடிவங்களாக காட்சியளித்தது
.
நீங்கள் தினமும் சாப்பிடும் அரிசியும், காய்கறிகளும், பழங்களும், பருகும் தண்ணீரும் உங்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு வார்த்தைகளுக்கு எற்றாவாறு ரியாக்ட் செய்கிறது.

END OF SEASON UP TO 70% OFF CLOTHING , FOOTWARE, BEAUTY & MORE
.
உங்கள் எண்ணங்களும், உணர்வுகளும் வார்த்தைகளும் வலிமையானவை..
.
நீங்கள் தினமும் சாப்பிடும் அரிசியும், காய்கறிகளும், பழங்களும், பருகும் தண்ணீரும் உங்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு வார்த்தைகளுக்கு எற்றாவாறு ரியாக்ட் செய்கிறது.
.
சத்தத்திற்கு / ஒலிக்கு தண்ணீர் ரியாக்ட் செய்யும் என்பது அறிவியல் ரீதியாக நிருபிக்கபட்டு உள்ளது...
.
பேய்ப்படம் மற்றும் வன்முறை நிறைந்த படங்களை பார்க்கும் போதும், எதிர்மறையாக பேசி கொண்டிருக்கும் போதும் தண்ணீர் குடிக்காதீர்கள்..
.
நீங்கள் ஒவ்வொரு முறை தண்ணீர் குடிக்கும்போது நீரிடம் பேசுங்கள்....
.
உங்களை குணபடுத்துமாறு மனதார தண்ணீரிடம் கேளுங்கள்
.
கண்டிப்பாக உங்களை குணப்படுத்தும்

Monday, November 6, 2017

நாள் ஒன்றுக்கு 36 மணி நேரம் வேண்டுமா?

*36 மணி நேரம் வேண்டுமா.?*
(எனக்கு தியானம் செய்யவும், மனதை அமைதிப்படுத்தி கொண்டு அகக்காட்சியை காண வேண்டும் என்றும் ஆசைதான். ஆனால் வேலை நேரத்தின் காரணமாக எதையும் செய்ய முடியவில்லை என நேர பற்றாக்குறையை கூறுபவர்களுக்கான நேர நிர்வாகம் குறித்த பதிவு)

     "அடடா! ஒரு நாள் என்பது 36 மணி நேரமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!" என்று எப்பவாவது அங்கலாய்த்திருக்கிறீர்களா ? ...லாய்த்திருப்பீர்கள். ஆனாலும் இல்லை என்று கெளரவமாக மறுக்கப் பார்க்கிறீர்கள்..... வேணாப்பூ! உண்மைய சொல்லிப் போடுங்க... தப்பில்ல .... நாம எல்லாரும் ஒரே மாதிரிதான்!

ஒரு வேளை அப்படி 36 மணி நேரம் கிடைத்தாலும் நம்மில் பலர் தலை அறுந்த கோழி போல குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருப்போமே தவிர, எல்லா வேலைகளையும் சரி வர முடிக்க மாட்டோம். அப்படி என்றால் பிரச்னை எத்தனை மணி நேரம் நம் கையில் இருக்கிறது என்பதல்ல, அதனை எப்படி திட்டமிட்டு உபயோகப் படுத்துகிறோம் என்பதிலும், தேவை இல்லாத விஷயங்களுக்கு ஒரு பெரிய NO சொல்வதிலும்தான் இருக்கிறது.

சரி! இதனால் என்ன பலன் என்கிறீர்களா? தேவையில்லாத மன உளைச்சல்கள் எல்லாவற்றையும் பாம்பு சட்டை உறிக்கிற மாதிரி உதறிப் போட்டு விட்டு, பட்டாம்பூச்சி போல மனசு லேசாகி பறந்து பறந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

*உங்களிடம் உள்ள ஒரு மணி நேரத்தை சரியாக உபயோகிக்காத போது அது சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த மணி நேரங்களைப் பாதித்து அந்தந்த நேரங்களில் முடிக்க வேண்டிய வேலைகளையும் தாமதப்படுத்தி மொத்தமாக ஒரு குழப்பத்தில் உங்களைத் தள்ளி விடும்*.

உங்கள் மேலதிகாரி உங்களின் வழக்கமான பணிகள் தவிர, கூடுதலான பணிகளைச் சொல்லும்போது "முடியாதுன்னா தப்பா நெனச்சுப்பாரோ என்னவோ" என்று பலி பீடத்தில் நிற்கிற ஆடு மாதிரி தலையாட்டாதீர்கள். உங்கள் திறமை என்ன, உங்கள் பலம், பலவீனம் என்ன, அந்த கூடுதல் வேலைகளைச் செய்ய முடியுமா என்று நிதானமாக யோசியுங்கள். முடியுமென்றால் 'யெஸ்' சொல்லுங்கள். இல்லையென்றால் ஏற்கனவே இருக்கிற பணிகளைச் செய்வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது, புதிதாக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக ஒன்றும் உங்களை வேலையை விட்டுத் தூக்கி விட மாட்டார்கள்.

*எப்போது எதற்கு முதலிடம் தர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.* நிறைய திருமணங்கள் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தோல்வியின் எல்லைகளைத் தொடுவதற்கும் இந்த தெளிவின்மையே காரணம். அலுவலக வேலைகளுக்கும் வீட்டுக் கடமைகளுக்கும் மத்தியில் தெளிவான கோடு கிழியுங்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான தருணங்களில் மனைவி, குழந்தைகளை, மற்ற உறவுகளை காக்க வைத்து விட்டு அலுவலகத்தை கட்டிக் கொண்டு அழாதீர்கள்.

அலுவலக வேலைகளை மட்டும்தான் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? வீட்டுத் தேவைகளையும் சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் ரொம்ப குழப்பம் வரும். முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பே ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதுங்கள் மறுநாள் என்னென்ன செய்ய வேண்டுமென்று….

பால் வாங்கும் போது காபி தூள் வாங்க வேண்டும், அக்காவுக்கு போன் பண்ணி 'Happy Wedding Day' சொல்ல வேண்டும்.
குட்டிக்கு ரெண்டு வரி நோட் வாங்க வேண்டும்.

இது போல எல்லாவற்றையும் வரிசையாக எழுதுங்கள். ஒன்று விடாமல் செய்து முடியுங்கள். உங்களுக்கே பெரிய வித்தியாசம் தெரியும். மற்றவர்களுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு உயரும். நேரத்தை நிர்வகிப்பது ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானமல்ல!

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...