Flipkart Offer

Sunday, March 31, 2019

பணத்தைப் பெற பணத்தைக் கொடுங்கள்!

பணத்தைப் பெற
பணத்தைக் கொடுங்கள்!
உங்கள் வாழ்வில் மேலும் அதிகமான பணத்தை கொண்டுவர மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிமுறை பணத்தை பிறர்க்குக் கொடுத்து உதவுவது. ஏனெனில் நீங்கள் கொடுக்கும் பொழுது என்னிடம் ஏராளமாக பணம் இருக்கிறது அதனால் நான் மற்றவர்களுக்கு உதவிகிறேன் என்று எண்ணுகிறீர்கள் அந்த எண்ணம் உங்களிடம் பணத்தை கவர்ந்திழுக்கிறது. இவ்வுலகில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்கள் மிகப்பெரிய நன்கொடையாளர்களாகவும் இருப்பதை அறியும் போது நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அவர்கள் மிகப் பெரிய தொகையை தானமாக அளிக்கின்றனர். அவர்கள் அப்படிக் கொடுக்கும்போது ஈர்ப்பு விதியால் பிரபஞ்சம் அவர்கள் கொடுத்ததைவிட பன்மடங்கு அதிகமான பணத்தை வெள்ளமென அவர்களிடம் கொண்டு வந்து சேர்கிறது.

"என்னிடம் கொடுப்பதற்கு போதுமான பணம் இல்லை" என்று சிந்திப்பவரா நீங்கள்?  அடடா! உங்களிடம் ஏன் போதுமான பணம் இருப்பதில்லை என்று இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா அப்படிப்பட்ட எண்ணம் வந்தால் கொடுக்க தூங்குங்கள் கொடுப்பது குறித்த உங்கள் நம்பிக்கையை நீங்கள் உணரும் பொழுது ஈர்ப்பு விதி இன்னும் அதிகமாக மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும்.

நன்றியுடன்
கோ.கோபிநாத்.

Tuesday, March 19, 2019

குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்


 குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்





திர்ஷ்டத்தின் விளைவுதான் வெற்றி என்று பலர் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் ஓரளவு உண்மை மறைந்திருக்கக் கூடும். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை சார்ந்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றத்திற்கு ஆளாகக்கூடும். நீங்கள் உங்கள் சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்க முடியும். திடமான உறுதியான குறிக்கோள் தான் இதற்கு முதல் படி.


நீங்கள் எதிர்கொள்ளும் நண்பர்கள் அணுகி உங்கள் வாழ்வில் எதை பெற அல்லது உங்கள் குறிக்கோளை பெற நீங்கள் கொண்டுள்ள திட்டம் என்ன என்றால் நூற்றுக்கு 98 பேருக்கு இதற்கான பதில் தெரிந்திருக்காது. தெளிவாக வெளிப்படுத்தப்படாத இந்த எண்ணங்களை கொண்டவரிடம் குறிக்கோளை அடைய சரியான திட்டம் இருக்காது. செல்வ வளங்களை பெற அதிர்ஷ்டம் மட்டும் போதாது. உங்கள் குறிக்கோளை நோக்கி தொடர் முயற்சி சரியாக திட்டமிடல் இவையே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கும்.

Tuesday, March 12, 2019

உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்

உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்



        அளவற்ற செல்வங்கள் உங்கள் அருகில் மிக மிக அருகில் உள்ளது. அவற்றை நீங்கள் உங்கள் ஆழ்மனதின் உதவியுடன் அடைய முடியும். நீங்கள் மகிழ்ச்சியுடனும், அன்புடன், புகழுடனும், ஆனந்தமாக, வாழ வழிவகை செய்யும்.


ஒருமுறை நீங்கள் உங்கள் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் இந்த அற்புத சக்தியை உணர்ந்து கொண்டால் உங்களது வாழ்வில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும், நீங்கள் கவர்ந்திழுக்க முடியும்.

                 நீங்கள்   ஒரு செல்வந்தராகவோ பணக்காரனாகவோ விரும்பினால் அவ்விருப்பத்தினை உங்கள்  ஆழ்மனதிடம் உணர்வுபூர்வமாக, அன்பாக, தெரியப்படுத்துங்கள். அது உங்களுக்கு ஏற்றார்போல் சரியான விடை அளிக்கும்.

            உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான ஏதோ ஒன்றை வாங்குவதற்கு உங்களிடம் பணம் இல்லாத போதும் கூட, அந்தப் பொருளை நீங்கள் வாங்கி விட்டது போல் உங்கள்  மனக்காட்சியில்  அப் பொருளை உருவாக்கி அது உங்கள் கையில் தான் உள்ளது போல் மனத்திரையில் கண்டு அதை உண்மை என்று உணருங்கள்.  நீங்கள் அறியாத ஏதோ ஒரு வழியில் அது உங்களை வந்து சேரும்.

நன்றி
கோ.கோபிநாத்.


Main Page

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...