Flipkart Offer

Thursday, July 20, 2017

ஆழ்மனத்தின் அற்புத சக்தி" -டாக்டர் ஜோசப் மர்பி
அத்தியாயம் நான்கு : புராதான மனநல மருத்துவம்

1. குணமாக்கும் சக்தி உங்கள் ஆழ்மனத்தில் உள்ளது என்பதை உங்களுக்கு நீங்களே பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

2. நன்றியுணர்வு என்பது நிலத்தில் ஊன்றப்பட்ட விதையைப் போன்றது. ஓரு கருத்தென்னும் விதையை உங்கள் மனத்தில் விதையுங்கள், எதிர்பார்ப்புடன் அதற்கு நீரூற்றி உரமிடுங்கள்; அது செழித்து வளர்ந்து வெளிப்படும்.


3. ஒரு புத்தகம், புதுக் கண்டுபிடிப்பு, அல்லது நாடகம் குறித்த உங்களது எண்ணம் உங்கள் மனத்தில் உண்மையான உருவமாக உள்ளது. அதனால், அது உங்களிடம் இப்போதே இருக்கின்றது என்பதை நீங்கள் நம்பத் தலைப்படலாம். உங்கள் எண்ணம், திட்டம், அல்லது கண்டுபிடிப்பின் வெளிப்பாட்டில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், அது நிச்சயமாகப் புற உலகில் தோன்றும்.

4. மற்றவர்களுக்காகப் பிரார்த்திக்கும்போது, முழுமை, அழகு, கச்சிதம் ஆகியவை குறித்த உங்களது அமைதியான உள்ளார்ந்த அறிவு, அடுத்தவருடைய ஆழ்மனத்திலுள்ள எதிர்மறையான எண்ண அமைப்புகளை மாற்றி அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.


5. பல்வேறு புனிதத் தலங்களில் ஏற்பட்டதாக நாம் கேள்விப்படும் அதிசயக் குணமாதல்கள் அனைத்தும், ஆழ்மனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதன் குணமாக்கும் சக்தியை விடுவிக்கும் கற்பனையாலும் கண்மூடித்தனமான நம்பிக்கையாலும்தான் விளைகிறது.

6. எல்லா வியாதிகளும் நம் மனத்தில்தான் உருவாகின்றன. நம் மனத்தில் அதற்கான ஓர் எண்ண ஓட்டம் இல்லாமல், நம் உடலில் எதுவுமே ஏற்படுவதில்லை.


7. மனவசியத் தூண்டுதல் மூலம் எந்த ஒரு வியாதிக்கான அறிகுறியையும் உங்களிடத்தில் ஏற்படுத்த முடியும். இது உங்கள் எண்ணத்திற்கு இருக்கும் சக்தியைத் தெளிவாகக் காட்டுகிறது.

8. ஒரே ஒரு குணமாக்கும் செயல்முறைதான் உள்ளது அதுதான் நன்றியுணர்வு (விசுவாசம்). ஒரே ஒரு குணமாக்கும் சக்திதான் உள்ளது. அதுதான் உங்களது ஆழ்மனம்.


9. நீங்கள் நன்றியுணர்வு (விசுவாசம்) கொண்டிருக்கும் பொருள் உண்மையானதோ இல்லையோ, நீங்கள் விளைவுகளைப் பெறுவது உறுதி. உங்கள் வெளிமனத்தின் எண்ணத்திற்கேற்ப உங்கள் ஆழ்மனம் செயல்விடை அளிக்கும். நன்றியுணர்வை  (விசுவாசத்தை) உங்கள் மனத்தின் ஓர் எண்ணமாகப் பாருங்கள். அது மட்டும் போதும்."

நன்றி : டாக்டர் ஜோசப் மர்பி.
ஆழ்மன அற்புத சக்தி.

Saturday, July 15, 2017

சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும்  வளர்த்துக் கொள்வதற்கான சுயபிரகடனங்கள்

1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையிலும் நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

2.நான் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதரிடத்திலும் பயனுள்ள விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

3.என்னுடைய அன்பை, நம்பிக்கையை திறமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

4.நான் சந்திப்பவர்களை ஊக்குவிக்கிறேன்.

5.நான் மற்றவர்களை புரிந்துகொண்டு மென்மையாக நடத்துகிறேன்.

6.நான் ஒவ்வொரு நாளும் அதிக உற்சாகமாகவும் பிரபலமாகவும் உருவாகி வருகிறேன்.

7.என்னுடைய அன்பால் பிறரை ஈர்க்கிறேன்.

8.நான் மிகவும் சக்திவாய்ந்த எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறேன்
.
9.நான் இயன்றவரை பிறரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றேன்.

10.வெற்றி என்பது விடாமுயற்சியுடன் சவால்களை அடைவதுதான் என்பதை உணர்கிறேன்.

11.என் மன உணர்வுகளை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளேன்.செயல்பாடுகளின்போதும் தடைகள் வந்தாலும் அவைகளில் மூலமும் சிலவழி முறைகளைக் கற்றுக் கொள்கிறேன்.

12 என்னுடைய சிந்தனையே என்னை உருவாக்குகிறது என்பதை உணர்கிறேன்.

உயர்ந்த சிந்தனைகளின் மூலம் உயர்ந்த வாழ்க்கை முறையை அடைய முடியும்.
ஆண்டு 1982, இடம் : ஹைதராபாத்.

மூத்த விஞ்ஞானி அவர்.

அரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார். தினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.

மாலையிலோ அல்லது இரவிலோ மீண்டும் விடுதிக்குத் திரும்புவார். இவரது பயணத்திற்காக, மகிழ்வுந்து ஒன்றினையும், ஓட்டுநர் ஒருவரையும், அரசு வழங்கியிருந்தது.

மூத்த விஞ்ஞானி அல்லவா.

கதிரேசன்.

பத்தொன்பது வயதில், இராணுவத்தில் சிப்பாய் ஆகச் சேர்ந்தார்.

இராணுவத்தில் இணைந்த அடுத்த ஆண்டே திருமணம். ஒரு மகன், ஒரு மகள். அளவான மகிழ்வான குடும்பம்.

ஒரு நாள், புதிதாய் ஒரு உத்தரவு வந்தது. பணி மாறுதல் உத்தரவு.

மூத்த விஞ்ஞானிக்கு மகிழ்வுந்து ஓட்டுநராய் உடனே பணியில் சேர வேண்டும்.

வேலை மிகவும் குறைவு ஓய்வோ மிக மிக அதிகம். செய்தித் தாட்களைப் படிப்பது, கிடைக்கும் புத்தகங்களைப் படிப்பது என்று பகல் பொழுதை, ஓய்வு நேரத்தை, மெதுவாய் நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், காலைப் பயணத்தின் போது, விஞ்ஞானி கேட்டார்.

கதிரேசன், என்ன படித்திருக்கிறீர்கள்?

பத்தாம் வகுப்பபில் தோல்வி அடைந்தவன் ஐயா நான். அதுவும் ஆங்கிலத்தில் மட்டும்,

பதில் சொல்வதற்குள், சற்று கூனிக் குறுகித்தான் போய்விட்டார்.

*ஒரு பாடம்தானே, ஆங்கிலப் பாடத்தில் எளிதாய் வெற்றி பெற்றுவிடலாம், படியுங்களேன் என்றார்.*

மகிழ்வுந்து வேகமாய் விரைந்து கொண்டிருந்தாலும், கதிரேசனின் மனம் திடீரென கிறீச்சிட்டு நின்றது. ஆங்கிலம் படிப்பதா? நானா?

கதிரேசனின் தயக்கத்தை உணர்ந்து கொண்ட, விஞ்ஞானி கூறினார்.

*நான் உதவுகிறேன், நீங்கள் படியுங்கள்.*

விரைவிலேயே இருவரும், ஆசிரியரும் மாணவருமாய் மாறிப் போயினர்.

பணி முடிந்ததும், மாலை வேலைகளில், ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணத்தை மிக எளிமையாய் சொல்லிக் கொடுத்தார்.

ஒரே வருடத்தில் கதிரேசன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவராய் மாறினார்.

+2 படிக்கலாமே?

படி, உன்னால் முடியும்.

தனித் தேர்வராய், +2 படிப்பில், கதிரேசன் சேர்ந்தார்.

படிப்பிற்கான முழுச் செலவினையும் விஞ்ஞானி ஏற்றுக் கொண்டார்.

பணி முடிந்து, மாலை விடுதிக்குத் திரும்பியதும், தினமும் ஒரு போட்டி நடக்கும்.

விஞ்ஞானி நூலகத்து நூல்களையும், கதிரேசன் தன் பாட நூல்களையும் படிக்க வேண்டும். யார் அதிகம் படிக்கிறார்களோ, அவர்களே வென்றவராவர்.

கதிரேசனுக்குப் போட்டி பிடித்துப் போனது.

51.4 சதவித மதிப்பெண்களுடன் +2 தேர்வில் வெற்றி பெற்றார்.

Small aim is a crime - சிறிய இலக்கு, குற்றத்திற்குச் சமம்.

பி.எஸ்ஸி., கணினி அறிவியல் படி என்றார். கதிரேசனின் விருப்பமோ, வேறாக இருந்தது. இருவரும் பேசி, ஒரு முடிவிற்கு வந்து, இளங்கலை வரலாற்றைத் தேர்ந்தெடுத்தனர்.

அஞ்சல் வழிக் கல்வி.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், உலக வரலாற்றை, அதிலும் குறிப்பாக, இரு உலக யுத்தங்களைக் கதை போல் சொல்லிக் கொடுத்தார்.

கதிரேசனுக்கு நாள் தோறும் வியப்பு கூடிக் கொண்டே போனது. இவர் உண்மையிலேயே அறிவியல் விஞ்ஞானியா?அல்லது வரலாற்று ஆய்வாளரா? என்னும் சந்தேகம் கூடிக் கொண்டே போனது.

51 விழுக்காடு மதிப்பெண்களுடன், இளங்கலையில் வெற்றி. விஞ்ஞானி மகிழ்ந்தார்.

கதிரேசனின் குடும்பம் ஆனந்தக் கூத்தாடியது.

முதுகலைப் பட்டம் படியேன்

விஞ்ஞானி மேலும் உற்சாகப் படுத்தினார்.

இளங்கலை மட்டுமே பயின்றுள்ள விஞ்ஞானி, தன் ஓட்டுநரை முதுகலைப் பட்டம் படி, படி என்று உற்சாகமூட்டினார்.

எம்.ஏ., பொலிடிக்கல் சயின்ஸ்.

பல தடைகள் வந்தபோதும், கதிரேசன் மனம் தளராமல் படித்தார். ஒரு முறை, குடும்பச் சூழலால், ஒரு தேர்வினையேத் தவற விட்டுவிட இருந்தார்.

தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாக வேண்டும். பயணிக்கப் போதுமான நேரமில்லை.

விஞ்ஞானி பார்த்தார். சற்றும் யோசிக்காமல், சற்றும் தயங்காமல், வானூர்தியில் சென்னைச் செல்ல, தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தார்.

பத்து ஆண்டுகள். பத்தே ஆண்டுகள்

பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்.,

கதிரேசன் படித்த படிப்புகள், அவரின் பெயரின் எழுத்துக்களை விட அதிகமாய் நீண்டன.

பத்தாண்டுகள் நிறைவுற்றபோத, இராணுவம், கதிரேசனைத் திரும்ப அழைத்தது.

1992 இல், தன் குருவைப் பிரிய மனமின்றிப் பிரிந்தார்.

1998 இல் விருப்ப ஓய்வு பெற்றுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

பணி ஓய்வு பெற்றபோதும், தன் ஆசிரியர் உள்ளத்தில் ஏற்றி வைத்த, படிப்பு, படிப்பு என்னும் ஒளி விளக்கு, மட்டும், சற்றும் ஒளி குன்றாமல் பிரகாசித்துக் கொண்டே இருந்தது.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டப் படிப்பிற்கு (டாக்டரேட்) பதிவு செய்தார்.

முனைவர் கதிரேசனாய் உயர்ந்தார்.

முனைவர் கதிரேசன்

இன்று, திருநெல்வேலி, அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்.

ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார்.

நண்பர்களே, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற, ஒரு ஓட்டுநரை, அந்த ஓட்டுநருக்குள், அவருக்கே தெரியாமல், ஒளிந்திருந்த, மறைந்திருந்த, கல்வி ஆர்வத்தை, இனம் கண்டு, ஆர்வமூட்டி, ஆதரவளித்து, படிக்க வைத்து, உயர்த்திய, அந்த உன்னத உள்ளத்திற்குச் சொந்தக்காரர், உயரிய மனிதர் யார் தெரியுமா?

மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...