Home Makeover Days

Home Makeover Days
UP TO 70 % OFFER ! | Tools & Home Improvements

Friday, January 12, 2018

நம்பிக்கை விதிதான் வாழ்க்கை விதி.

நம்பிக்கை விதிதான் வாழ்க்கை விதி.





நம்பிக்கை என்பது உங்கள் மனதில்  தோன்றும் ஓர் எண்ணமே உங்களை  பாதிக்கும் அல்லது துன்புறுத்தும் பொருட்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதீர்கள்.

உங்கள் ஆழ்மனத்தின் சக்தி உங்களை குணபடுத்த வல்லது, உத்வேகமூட்ட வல்லது, பலபடுத்த வல்லது, வளாமாக்க வல்லது என்று நம்புங்கள். நீங்கள் நம்புவதை போன்றே உங்காள் வாழ்வில் நடக்கும்.

நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும்

கோபிநாத்

Wednesday, January 10, 2018

எண்ணங்கள் பொருட்களாக பரிணாமிக்கும்

எண்ணங்கள் பொருட்களாக பரிணாமிக்கும்


ஒரு துறவியும் அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் .

அந்த நேரத்தில் வெகுதூரத்தில் ஒரு புலி உருமுவதும் அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது.

உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது .

அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான்
ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் .

சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார் . குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து சீடன் கண்களை திறந்து பார்த்தான் .

குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.

சீடன் குரு விழித்ததும் அவரிடம் கேட்டான் எப்படி குருவே கோவமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது.

"நாம் நம்மை சுற்றி எவ்விதமான அலையை பறப்புகிறோமோ நம்மிடம் வருபவர்களும் , நம்மை சுற்றி இருப்பவர்களும் அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .

எனவே நம்மை சுற்றி நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் .

நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் .

அன்புடனும் நன்றியுணர்வுடனும்
கோபிநாத்

குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்!

  குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்! சிறிய விதைகள் , பெரிய மரங்களாக வளர்வது போல, நம் குழந்தைகள் நாளைய உலகின் முன்னோடிகளாக...